தமிழ்நாடு
வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர்: வீடியோ வைரல்.!
வாடிக்கையாளர் சூப் சாப்பிட்டு விட்டு அதில் உள்ள எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு சென்ற நிலையில் அந்த எலும்பு துண்டுகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
சென்னை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளாக சூப் கடை நடத்தி வருவதாகவும் அவருக்கு பல வாடிக்கையாளர்கள் உண்டு என்றும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்த கடைக்காரர் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டு கீழே போட்ட எலும்பு துண்டுகளை எடுத்து கழுவி மீண்டும் சூப்பில் கலந்து காட்சிகள் அதில் உள்ளன .
இந்த வீடியோ இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடம்: அரவிந்த் தியேட்டர் அருகில்
அப்பல்லோ மருத்துவமனை முன்பு
காரப்பாக்கம், சென்னை
நாள்: 11/03/2022மர்ம மத வியாபாரியின்
மலிவான விலையில் சுவையான சூடான மட்டன் சூப் சாப்பிட்டுவிட்டு சப்பி கீழே போட்ட எலும்பு துண்டுகளை எடுத்து கழுவி மறுபடியும் சூப்பில் போட்டு அடுத்த கஸ்டமருக்கு ???? pic.twitter.com/qpk8DpwOYM— Saravanaprasad Balasubramanian ???????? (@BS_Prasad) March 13, 2022