சினிமா செய்திகள்

’பொன்னியின் செல்வன்’ படத்தை ஆரம்பித்த ரஜினியின் மகள்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் 2022ல் முதலாம் பாகம் மற்றும் 2023 இல் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ’பொன்னியின் செல்வன்’ நாவலை வெப்தொடராக இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கான பணிகளை அவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ பணிகள் ஆரம்பமாகி விட்டதாகவும் ’புதுவெள்ளம்’ என்ற முதல் சீசன் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களாக நாவலாக வெளியான நிலையில் முதல் பாகத்தின் டைட்டில் தான் புதுவெள்ளம் என்பதும் அந்தப் பாகத்தை தான் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐந்து பாகத்தையும் வெப்தொடராக இயக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் முதல் பாகத்தில் பணி தற்போது தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version