சினிமா செய்திகள்

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு செளந்தர்யா தான் காரணமா?

Published

on

ரஜினியின் இளையமகள் பதிவு செய்த டுவிட் ஒன்று தான் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிகள் பிரிய காரணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திடீரென இருவரும் நேற்று பிரிவதாக அறிவித்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்தது தான் தனுஷை ஆத்திரமடையச் செய்ததாகவும் அதனால் தான் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகவும் வதந்தி ஒன்று பரவி வருகிறது.

சிம்புவும் ஐஸ்வர்யாவும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள் என்றும் இருவரும் காதலிப்பதாக கூட செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்ததே. ஆனால் திடீரென ஐஸ்வர்யா தனுஷை காதலிப்பதாக கூறிய பின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்களை சமாதானப்படுத்தி அவர் தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாக்டர் பட்டம் பெற்ற நிலையில் அவருக்கு வாழ்த்துக் கூறி சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவு செய்திருந்தார். இதுதான் தனுஷை ஆத்திரமடையச் செய்ததாகவும் தனக்கு போட்டியாளராக இருப்பவருக்கு சௌந்தர்யா டுவிட் பதிவு செய்ததால் தான் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லை என்றும் சௌந்தர்யா சிம்புவை பாராட்டியதற்கும், தனுஷ் – ஐஸ்வர்யா என்ன சம்பந்தம் என்றும் அவர்கள் இருவருக்கும்தான் ஏதோ பிரச்சனை என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கு உண்மையான காரணம் அவர்கள் இருவர் மற்றும் இரு குடும்பத்தார் தவிர வேறு யாருக்கும் இதுவரை தெரியவில்லை என்றும் மிக நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூட இந்த செய்தியை கேட்டு ஆச்சரியப்பட்டனர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Trending

Exit mobile version