தமிழ்நாடு
இன்று இரவு விடுதலை.. சிறையில் இருந்து வெளியே வருகிறார் சோபியா
![lois sofia - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/lois-sofia.jpg)
சென்னை: தூத்துக்குடி சோபியா இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியா வைரல் ஆகியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று கோஷமிட்டார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை இதனால் போலீசில் புகார் அளித்தார். இதனால் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி நீதிமன்றம் மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது. அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி சோபியா இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார்.