சினிமா செய்திகள்

’சூரரைப் போற்று’ திரைப்படத்தை இலவசமாக தரும் சூர்யா: வாங்க மறுக்கும் திரையரங்க உரிமையாளர்கள்!

Published

on

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தை இலவசமாக திரையரங்குகளுக்கு தர சூர்யா முன் வந்ததாகவும் ஆனால் அதனை வாங்க திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ’சூரரைப் போற்று’. இந்த படத்தை சூர்யா ஓடிடியில் வெளியிட முடிவு செய்தபோது திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சூர்யாவின் படங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப் போவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. சூர்யாவுக்கு நல்ல லாபத்தைப் பெற்றுக் கொடுத்த நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் அந்த படத்தை அவர் இலவசமாகவே திரையரங்கு உரிமையாளர்களுக்கு தருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை ஒரு சில திரையரங்க உரிமையாளர்கள் வரவேற்றாலும் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் அந்த படத்தை வாங்கி திரையிட மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யா தான் முதன்முதலில் ஓடிடியில் படத்தைக் கொடுக்கும் வழியை ஆரம்பித்து வைத்ததாக அவர் மீது திரையரங்கு உரிமையாளர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் ’சூரரைப் போற்று’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version