தொழில்நுட்பம்
வாட்ஸ்ஆப்பில் விரைவில் நமக்கு நாமே தகவல் அனுப்பலாம்!
உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்ஆப் உள்ளது.
வாட்ஸ்ஆப்பில் விரைவில் நமக்கு நாமே தகவல் அனுப்பும் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இப்போது வாட்ஸ்ஆப்பில் நமக்கு நாமே தகவல் அனுப்பும் சேவை பீட்டா சேவையை பெற்று வரும் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு இந்த நமக்கு நாமே தகவல் அனுப்பும் சேவை வர உள்ளது.
இதன் மூலம் மொபைல் போன்களில் தனக்கு தானே எஸ்எம்எஸ் அனுப்பும் முறை குறைந்து வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.