தமிழ்நாடு

இனி தமிழ்நாட்டில் எல்எல்ஆர் விண்ணப்பிக்க ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை!

Published

on

இனி தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, எல்எல்ஆர் பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் துறை மற்றும் தமிழ்நாடு இ-ஆளுமை முகமையும் இணைந்து ஒப்பந்தம் போட்டுள்ளன.

அதன்படி எல்எல்ஆர் விண்ணப்பிப்பது, ஓட்டுநர் உரிமங்களில் திருத்தம் செய்வது, வாகனம் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்வது போன்ற பணிகளை ஆன்லைனில் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகச் சென்னையில் உள்ள 100 இ-சேவை மையங்களில் இந்த சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் இந்த சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் இந்த முடிவினால், ஆர்டிஓ அலுவலகம் வருபவர்களின் எண்ணிக்கை குறையும், சேவைகளை இன்னும் சிறப்பாக வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version