தமிழ்நாடு
மகிழ்ச்சி செய்தி.. விரைவில் வருகிறது மாதாந்திர மின்சார கட்டணம் நடைமுறை!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாதாந்திர மின்சார கட்டணம் முறையில் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் முறையே நடைமுறையில் உள்ளது.
இதனை மாதாந்திர கணக்கீடு முறையாக மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் அதற்காக மின்சார மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இது முடிவடைந்த பிறகு தமிழ்நாட்டில் மாதாந்திர மின்சார கட்டணம் முறை பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்றவாறு மாவட்டங்கள் வாரியாக புதிய கட்டணம் முறை பயன்பாட்டுக்கு வரும்.
முதற்கட்டமாகச் சென்னை மற்றும் 24 மாவட்டங்கள் என மொத்தமாக 2.19 கோடி மின்சார இணைப்புகள் மாதாந்திர கட்டணம் முறை பயன்பாட்டுக்கு வர உள்ளது.