இந்தியா

கொரோனா தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்ய முடிவு.. மத்திய அரசு அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் ZyCov-D, Biological E நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்த தடுப்பூசிகளை அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2021, மே மாதம் வரையில் இந்தியாவிலிருந்து 6.63 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டபோது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதே காரணம் என கூறப்பட்டது.

எனவே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இப்போது கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அக்டோபர் மாதம் முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஏற்றுமதி மட்டுமல்லாமல், இந்திய அரசு சில நாடுகளுக்கு நன்கொடைகளாகவும் அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version