Connect with us

இந்தியா

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி: மீண்டும் தீவிர அரசியலில்!

Published

on

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்பிக்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது தேசிய அளவில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை மிகவும் சோர்வடைய வைத்துள்ளது. கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெறும் 52 இடங்களில் தான் வென்றது. ஆனால் பாஜக தனித்து 303 இடங்களில் வென்றது.

இந்நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் காரிய கமிட்டி ராகுலின் ராஜினாமா கடிதத்தை இன்னமும் ஏற்கவில்லை. இருந்தாலும் ராகுல் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாகவும் யாரிடமும் பேசாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டம் இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தலைவராக சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதனையடுத்து காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் சோனியாகாந்தியை காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக ஏகமனதாக தேர்வு செய்தனர்.

உடல் நலக்குறைவு காரணமாக தனது தலைவர் பதவியை ராகுல் காந்தியிடம் கொடுத்த சோனியா காந்தி சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்துவந்தார். இந்நிலையில் அவர் தற்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸுக்கு வாக்களித்த 12.13 கோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாக இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!