சினிமா செய்திகள்

போதை விவகாரம்: ஊடகங்கள் மீது பொங்கி எழுந்த சோனியா அகர்வால்!

Published

on

நேற்று கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் ஒருசில ஊடகங்கள் தமிழ் நடிகை சோனியா அகர்வால் புகைப்படத்தை இந்த செய்தியுடன் வெளியிட்டதால் நடிகை சோனியா அகர்வால் ஆவேசமாக தனது டுவிட்டரில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் ’எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் தரும் அளவுக்கு அடுத்தடுத்து போன் அழைப்புகள் மெசேஜ்கள் வர காரணம் இந்த மீடியா தான். ஊடகவியலாளர் என்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, தவறான செய்திக்கு என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய ஊடகவியலாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று கன்னட நடிகை சோனியா அகர்வால் உள்பட மூன்று பேர்கள் வீடுகளில் திடீரென போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனைக்கு பின்னர் கன்னட நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த செய்திகள் அனைத்து இந்திய ஊடகங்களிலும் வெளியானது. ஆனால் ஒரு சிலர் மட்டும் கன்னட நடிகை சோனியா அகர்வால் புகைப்படத்திற்கு பதிலாக தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த நடிகை சோனியா அகர்வால் தனது டுவிட்டரில் ஊடகவியலாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version