தமிழ்நாடு

தமிழகத்தின் பல இடங்களில் மின்வெட்டு: திமுக ஆட்சி என்றாலே இப்படித்தான் என மக்கள் புலம்பல்

Published

on

நேற்று தமிழகத்தின் பல இடங்களில் பகல் இரவு என பாரபட்சம் இன்றி மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து திமுக ஆட்சி என்றாலே இப்படித்தான் என பொதுமக்கள் புலம்பத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றபோது மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்த நிலையில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே மின்வெட்டும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கோடை வெயில் தற்போது சுட்டெரிக்கும் நிலையில் திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவு பகல் என பாரபட்சமின்றி அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மின்வெட்டு காரணமாக வீடுகளுக்குள் இருக்க முடியாமல் மக்கள் வீதியை நோக்கி படை எடுத்து வருவதாகவும் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் பரீட்சை நேரத்தில் உள்ள மாணவர்கள் கடும் அவதிப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும் இரவில் மூன்று மணி நேரத்திற்குமேல் மின்வெட்டு ஏற்படுவதால் புழுக்கம் தாங்காமல் வீடுகளைவிட்டு நள்ளிரவில் பொதுமக்கள் வெளியே வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தேனி திருவண்ணாமலை தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தொகுப்பில் இருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டதால் தான் ஒரு சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இருப்பினும் நிலைமையை சரிசெய்ய அடுத்த சில நிமிடங்களில் மின்உற்பத்தி அதிகமாக்கி மின்வெட்டை தவிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version