இந்தியா

ஐபிஎல் அணியை ஒரு ரூபாய்க்கு கேட்டனர்.. மல்லையா விஷயத்தில் சு.சாமி அடுத்த குண்டு

Published

on

டெல்லி: விஜய் மல்லையாவின் ஐபிஎல் அணியை யாரோ ஒரு முக்கிய நபர் ஒரு ரூபாய்க்கு கேட்டதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையாவால் பாஜக பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் மல்லையா.

இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்ததாக கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல்லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விற்று விடுமாறு மல்லையாவிடம் யாரோ முக்கிய பிரமுகர் பேரம் பேசியுள்ளார் என்று இன்று சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார். இது பாஜகவை சேர்ந்த ஒருவர்தான் என்று இப்போதே சமூக வலைதளத்தில் விவாதம் தொடங்கி உள்ளது.

ஐபிஎல் ஊழல் ஏற்கனவே பிரச்சனை ஆன நிலையில் இது இன்னும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. நிதித்துறைதான், மல்லையாவின் லுக் அவுட் நோட்டிஸின் வலுவை குறைத்துள்ளது. இதை தனியாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version