தமிழ்நாடு

சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வந்த நிலையில் இன்று காலை சில இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

சென்னையிலுள்ள கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருவதாகவும் இதனை அடுத்து அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்ததன் காரணமாக வெப்பத்தால் பொதுமக்கள் அவதி இருந்தனர். இந்த நிலையில் இந்த மழை சென்னை மக்களுக்கு ஒரு சிறிய திருப்தியை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, கீரமங்கலம், ஆலங்குடி, வடகாடு, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதேபோன்று கோடையில் அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே பொதுமக்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version