ஆன்மீகம்

2024ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்தியாவில் நெருப்பு வளையம் தென்படுமா? முழு விபரங்கள்!

Published

on

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை நிகழ இருக்கிறது. இந்த கிரகணம் முழு சூரிய கிரகணம் அல்ல, இது வளைய சூரிய கிரகணமாக இருக்கும். இதனால் வானில் சூரியனைச் சுற்றி நெருப்பு வளையம் உருவாகும். அக்டோபர் 02ஆம் தேதி சர்வ பித்ரு அமாவாசையுடன் ஷ்ராத்த பக்ஷம் நிறைவடையும்.

சூரிய கிரகணம் எப்போது? இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2 அன்று இந்திய நேரப்படி இரவு 9:13 மணிக்கு தொடங்கி, மாலை 3:17 மணிக்கு முடிவடையும். இவ்வருடத்தில், இது இரண்டாவது சூரிய கிரகணமாகும்.

நெருப்பு வளையம் (Ring of Fire) எப்படி உருவாகிறது? வானியல் நிபுணர்கள் கூறும் படி, சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் இருப்பதால், சூரியனின் ஒளி பூமியை அடையாமல் இருக்கும்.

சந்திரன் பூமிக்கு தொலைவில் இருக்கும் போது, சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. இது நெருப்பு வளையத்தை உருவாக்கும். சில இடங்களில், இந்த நெருப்பு வளையம் சில நொடிகளில் இருந்து 12 வினாடிகள் வரை தென்படும்.

இந்தியாவில் நெருப்பு வளையம் தென்படுமா? இந்த ஆண்டின் சூரிய கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்கா, அர்ஜென்டினா, பிஜி, சிலி மற்றும் பிற பகுதிகளில் காண முடியும். ஆனால் இந்த கிரகணம் இந்தியாவில் காண்பிக்கப்படாது.

சூதக் காலம் செல்லுமா? சூரிய கிரகணத்திற்கு முன்பாக 12 மணி நேரம் சூதக் காலம் எனப்படும். ஆனால் இந்தியாவில் இந்த கிரகணம் தென்படாததால், சூதக் காலம் செல்லாது.

Poovizhi

Trending

Exit mobile version