வேலைவாய்ப்பு
இழந்த வேலையைத் திரும்பப் பெற ஹேக் செய்த இளைஞர்!
டெல்லியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை இழைந்த இளைஞர், அந்த வேலையைத் திரும்பப் பெற ஹேக் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள் பல நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன.
அப்படி டெல்லியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை இழந்த இளைஞர் ஒருவர், பணி நீக்கம் பட்டியலில் உள்ள தனது பெயரை நீக்கி மீண்டும் வேலையைப் பெற ஹேக் செய்ய முயன்றுள்ளார்.
அதைக் கண்டுபிடித்த நிறுவனம் அந்த மென்பொருள் பொறியாளர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளது. அதை விசாரித்த காவல் துறையினர் அந்த ஊழியரால் பல்வேறு தரவுகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அந்த இளைஞரை பணிக்கு அமர்த்த வலியுறுத்தியுள்ளது.
ஆனால், சம்பளம் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளாததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.