தமிழ்நாடு
சோபியா விடுதலையை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்!
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கம் இட்டதாகத் தமிழிசை சவுந்தராஜன் காவல் துறையில் அளித்த புகாரின் பெயரில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட சோபியாவை இன்று தூத்துக்குடி விமான நிலையம் நிபந்தனையின்றி விடுதலை செய்த நிலையில் இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்து ஆயிரக்கணக்கானோர் சிறை வாசல் முன் திரண்டு வந்து வரவேற்று வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.
தமிழிசைக்கு எதிராகவும், சோபியாவுக்கும் ஆதரவாகவும் தமிழ் நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் ஆதரவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.