வேலைவாய்ப்பு

தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறை வேலை!

Published

on

தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்தினை தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: சமூகப் பணியாளர் – 01

மாத சம்பளம்: தொகுப்பூதியமாக ரூ.14,000 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடங்கள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வேலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான www.vellore.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனைத் தெளிவாகப் பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் – 632001.

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் முழு விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.vellore.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/10/2019103131.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/10/2019103146.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:15-11-2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version