தமிழ்நாடு
10 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்த பனிப்பொழிவு இன்னும் பத்து நாட்களுக்கு இருக்கும் எனவும், அதன்பின்னர் வழக்கமான காலநிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாகப் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் உறைபனி நிலவுகிறது. பல மாவட்டங்களில் பனிப்பொழிவு தினமும் அதிகரித்து வருகிறது.
இந்த பனிப்பொழிவு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையும் கூறும்போது, தற்போது மேகக்கூட்டங்கள் குறைவாக இருப்பதால், பூமியின் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. இந்த நேரம் நமக்கு வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றுடன், கிழக்கு திசை காற்றும் சேர்ந்து வீசுவதால் கடும் பனிப்பொழிவு சூழல் காணப்படுகிறது.
இது பனிப்பொழிவு காலம்தான். இன்னும் 10 நாட்களுக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும். அதன் பின்னர், வழக்கமான காலநிலை இருக்கும். மழை பெய்ய வாய்ப்பில்லை. அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.