சினிமா செய்திகள்

சினேகன் மனைவியின் தாலி தொலைந்து விட்டதா? அதிர்ச்சி தகவல்

Published

on

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் பிக்பாஸ் போட்டியாளருமான சினேகன் மனைவியின் தாலி தொலைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி ஆகிய இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த திருமணத்திற்கு பாரதிராஜா கமல்ஹாசன் உள்பட பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் ஆகி சில நாட்களிலேயே சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சினேகனின் மனைவி கன்னிகா ரவி, முதல்முறையாக சினேகன் தனது காதலை புரபோஸ் செய்த போது, அதற்கு பதில் சொல்ல ஐந்து மாதங்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டதாக கூறினார்.

மேலும் தான் அவருடைய காதலை ஏற்றுக் கொண்ட அன்று தாலி மஞ்ச கயிறு உடன் புரபோஸ் செய்ததாகவும் அந்த தாலியை சென்டிமென்டாக இருவரும் பாதுகாத்து வந்ததாகவும் ஆனால் திடீரென அந்த தாலி ஒரு நாள் காணாமல் போய்விட்டதாகவும் அதை நினைத்து பல நாள் தான் அழுது கொண்டு இருந்ததாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். கன்னிகா ரவியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version