சினிமா செய்திகள்

2014ல் சினேகனுடன் எடுத்த முதல் போட்டோ: கன்னிகா ரவி டுவிட்

Published

on

கடந்த 2014ஆம் ஆண்டு சினேகனுடன் எடுத்த முதல் புகைப்படத்தை நடிகை கன்னிகா ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாரதிராஜா உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. மேலும் சினேகன் – கன்னிகா ரவி திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் கன்னிகா ரவி தனது டுவிட்டரில் முதல் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் கடந்த 2014ஆம் ஆண்டு நானும் சினேகனும் ஒன்றாக இணைந்து எடுத்த படம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார், மேலும் என்னுடைய முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யாரையும் கூப்பிட முடியவில்லை என்று அதனால் கோபம் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு பார்த்து ரசிகர்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே இப்பொழுதும் இருக்கிறீர்கள் என்றும் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் தொடர வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version