இந்தியா

மீண்டும் மத்திய அமைச்சராகிறார் ஸ்மிருதி இரானி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்றார். அதேப்போல இரண்டாவது முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றார் ஸ்மிருதி இரானி.

வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த பதவியேற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

சரியாக 7 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்ற பின்னர் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்.

கடந்தமுறை மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த முறையும் மத்திய அமைச்சராக பதவியேற்றார். ஸ்மிருதி இரானி கடந்தமுறை அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தியிடம் தோல்வியை தழுவினார். ஆனால் அவருக்கு பிரதமர் மோடி மத்திய அமைச்சர் பதவியை வழங்கினார்.

இதனையடுத்து மீண்டும் இந்தமுறை அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக ஸ்மிருதி இரானி களமிறக்கப்பட்டார். ஆனால் இந்தமுறை ராகுல்காந்தியை அமேதியில் வீழ்த்தி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தார். இதனையடுத்து இந்தமுறையும் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார் பிரதமர் மோடி.

seithichurul

Trending

Exit mobile version