தமிழ்நாடு

கணவனை பிரிந்த பெண் இளைஞருடன் உல்லாசம்: நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த விபரீதம்!

Published

on

வேலூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த அந்த பெண்ணின் 2 வயது மகளுக்கு சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை பிரிந்து தாய் வீட்டில் தனது 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் உதயகுமார் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கத்தை அறிந்த பெண்ணின் தாய் கண்டித்துள்ளார். இதனால் அந்த பெண் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். குழந்தையை மட்டும் தாய் வீட்டில் விட்டிருந்தார்.

இதனால் அந்த பெண்ணும், அவரது காதலனும் எந்த இடையூறும் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணின் தாய் சில மாதங்களில் இறந்துவிட தனது குழந்தையை தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் அவர். சிறுமியின் வருகை அந்த பெண்ணின் காதலனுக்கு இடையூறாக இருந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக உல்லாசமாக இருந்ததை சிறுமி பார்த்துவிட்டார்.

இதனால் சிறுமியை தீர்த்துக்கட்ட அந்த பெண்ணின் காதலன் உதயகுமார் திட்டமிட்டு சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்தியுள்ளான். சிறுமியின் உடலில் சிகரெட் சூடு இல்லாத இடமே இல்லை எனலாம். சிறுமி எழுந்து ஓடாத வண்ணம் பாதத்திலும் சூடு வைத்துள்ளனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்கு புகார் அளித்து குழந்தையை மீட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுமியின் காயங்கள் மிக மோசமாக இருந்துள்ளது. குழந்தை உயிரிழக்க வேண்டும் என்பதற்காக காயங்களை மரக்குச்சியால் கிளறி வைத்துள்ளனர் அந்த கள்ளக்காதல் ஜோடி. இதனையடுத்து சிறுமியின் தாயையும் தலைமறைவாக இருந்த காதலன் உதயகுமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending

Exit mobile version