சினிமா

SK22: சாய்பல்லவியுடன் நடனம் ஆடுகிறேனா?

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து சாய்பல்லவியுடன் நடிக்கும் படத்தில் அவருடன் நடனம் ஆடுவது குறித்து தெரிவித்துள்ளார்.

’பிரின்ஸ்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அஸ்வின் மடோனா இயக்கத்தில் ‘மாவீரன்’ படம் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து, கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் முதல் முறையாக சாய்பல்லவியுடன் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படம் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கக்கூடிய நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இந்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘என்னுடைய அடுத்தப் படத்தில் சாய்பல்லவிதான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடனம் ஆடும்படி ஒரு பாடல் கூட இல்லை’ எனக் கூறியுள்ளார்.

சாய்ப்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயனின் நடனத்திற்கு நிறைய ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தில் இருவரும் இணைந்து ஆடும்படி ஒரு பாடல் கூட இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதையோடு இல்லை என்றாலும் படத்தின் புரோமோஷனுக்காகவது இருவரும் ஆடும்படியான ஒரு பாடலை வைக்க வேண்டும் என ரசிகர்கள் இப்போதே வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version