சினிமா செய்திகள்

எஸ்.ஜே. சூர்யாவுக்காக 40 நாள் கால்ஷீட் கொடுத்த அமிதாப் பச்சன்!

Published

on

பாலிவுட்டின் பிதாமகர், பிக் பி என அழைக்கப்படும் இந்திய திரையுலகின் இணையில்லா சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், இந்தியாவின் பல மொழிகளிலும் இதுவரை நடித்துள்ளார். ஆனால், எத்தனையோ முறை முயற்சித்தபோதும், தமிழில் அவர் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில், தற்போது முதன்முறையாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது.

இந்த படத்திற்காக 40 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் அமிதாப்பச்சன். மேலும், ஒரே மூச்சில் நடித்துக் கொடுக்கவும் சம்மதித்துள்ளாராம்.

உயர்ந்த மனிதன் படத்தை தொடர்ந்து, மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version