சினிமா

எங்களுக்கு தீபாவளி நவம்பர் 25ம் தேதிதான்டா… மாநாடு அப்டேட் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா

Published

on

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது. நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மாநாடு படத்தின் டிரெய்லரை பார்த்த போதே தெரிந்தது.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

‘மாநாடு படத்தின் எனது காட்சிகளுக்கான 8 நாட்களுக்கான டப்பிங் பணிகளை 5 நாட்களில் பேசி முடித்துவிட்டேன். நாடி நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை என எல்லா இடங்களிலும் ஒரே வலியாக இருக்கிறது. குறைந்தது 10 நாட்கள் நான் ஓய்வு தேவை. வலி பின்னுகிறது.. ஆனால், ரிசல்ட்டை பார்த்த போது ஒன்றுதான் எனக்கு தோன்றியது. தீபாவளி நவம்பர் 25 தாண்டா’ என பதிவிட்டு சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version