தமிழ்நாடு
சிவசங்கர் பாபாவின் யாஹூ இமெயில் முடக்கம்: காவல்துறை தகவல்!
![baba sivasankar - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/06/baba-sivasankar.jpg)
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட புகாரின் பேரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை நேற்று சுசில்ஹரி சர்வதேச பள்ளிக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அங்கு அவரிடம் விசாரணை செய்தனர். மேலும் சுசில்ஹரி பள்ளியில் இருந்த லேப்டாப், பென்டிரைவ் உள்பட பல பொருட்கள் கைப்பற்றியதாகவும், காவல்துறையினர் விசாரணைக்கு சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் யாஹூ இமெயில் முடக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. சிவசங்கர் பாபா கடந்த பல ஆண்டுகளாக ஆபாச சாட் செய்ய யாஹூ இமெயிலை பயன்படுத்தி வந்ததாகவும் இதனை அடுத்து இந்த இமெயில் தற்போது முடக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இமெயில் முகவரி மூலம் சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி வந்ததாக கூறப்படும் நிலையில் அந்த ஈமெயில் தற்போது முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் முடக்கப்பட்ட யாஹூ இமெயிலை சைபர் ஆய்வகம் மூலம் ஆய்வு செய்ததாகவும் அதில் ஆபாச சாட் செய்ததற்கான ஆதாரம் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில் இந்த இமெயிலை மேலும் ஆய்வு செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.