தமிழ்நாடு

எனக்கு ஆண்மை இல்லை: சிவசங்கர் பாபாவின் பரபரப்பு வாக்குமூலம்

Published

on

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்றும், தன்னால் எப்படி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முடியும் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்த சிவசங்கர் பாபா, அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதனை அடுத்து சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்றும் ஆண்மை இல்லாத தன்னால் எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும் என்றும் சிபிசிஐடி மூலம் கொடுத்திருப்பது குறித்து ஜாமீன் மனு மீதான விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை நம்ப மறுத்த நீதிபதிகள் ஆண்மை இல்லாத சிவசங்கர் பாபாவுக்கு எப்படி மகன் மகள் பிறந்தார்கள் என்று கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version