தமிழ்நாடு

3வது முறையாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா: வெளியே வர வாய்ப்பே இல்லையா?

Published

on

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா என்பதும் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு காரணமாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 2வது வழக்கு சமீபத்தில் பதிவு செய்து அதிலும் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக சிவசங்கர் பாபா மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாய்பாபாவை மேலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாகவும், ஏற்கனவே இரண்டு வழக்குகளில் சிவசங்கர் பாபா கைது செய்து கைதாகி சிறையில் உள்ள நிலையில் மூன்றாவது வழக்கில் கைதாகி உள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று ஆஜர்படுத்துகிறார்கள். சிவசங்கர் பாபா மீது வழக்குகள் குவிந்து கொண்டே வருவதாக இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

ஏற்கனவே அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபா மீது புகார்கள் குவிந்து வருவதால் அவர் மீது மேலும் இன்னும் சில வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version