சினிமா செய்திகள்
’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சிவகார்த்திகேயன்: மாஸ் அறிவிப்பு
சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் வரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
இந்த அறிவிப்பில் ‘சும்மா சுர்ருன்னு வருது’ என்ரு தொடங்கும் இந்த பாடலை எழுதியது சிவகார்த்திகேயன் என்றும் அமரன் மாலிக் மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் என்றும் இந்த பாடலை டி இமான் கம்போஸ் செய்துள்ளார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே விஜய் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுக்கு பாடல்கள் எழுதி வரும் சிவகார்த்திகேயன் தற்போது சூர்யாவின் படத்திற்கு பாடல் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர்.
#SummaSurrunu varuthu #ETThirdSingle ????
Releasing on Jan 16th @ 6 PM!An @immancomposer musical
???? @ArmaanMalik22 & @NikhitaGandhi
???? @Siva_Kartikeyan@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @RathnaveluDop @priyankaamohan @AlwaysJani @AntonyLRuben #EtharkkumThunindhavan #ET pic.twitter.com/8gyi6nCaqQ— Sun Pictures (@sunpictures) January 14, 2022