சினிமா செய்திகள்

’டாக்டர்’ ரிலீஸ் சிக்கலை டுவிட்டரில் பாட்டாகவே பாடிய சிவகார்த்திகேயன்!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் இன்று காலை 6 மணிக்கே சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என்பதும் மற்ற திரையரங்குகளில் இன்று காலை 9 மணிக்கு ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று இந்த திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் நேற்று இரவு முதல் திடீரென இந்த படத்தின் ரிலீசுக்கு ஒரு சில சிக்கல் ஏற்பட்டதாகவும், அந்த சிக்கலை தீர்ப்பதற்காக சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு இந்த படத்தின் சிக்கல் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது இன்று இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டதாகவும் ஆனால் சிவகார்த்திகேயன் தலையிட்டதன் காரணமாகவே அவர் இந்த படம் இன்று ரிலீசாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

’டாக்டர்’ தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை அனைத்தையும் தீர்த்த சிவகார்த்திகேயன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவியது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தான் நடித்த ’எதிர்நீச்சல்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலின் வரிகளை குறிப்பிட்டு மறைமுகமாக ’டாக்டர்’ படத்தின் பிரச்சனையை அவர் தெரிவித்துள்ளார். அவரது டுவிட் இதோ:

நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே..
எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி

மேலும் என்று ’டாக்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்றும் அனைவரும் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவரது இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version