சினிமா செய்திகள்

மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்… வைரல் புகைப்படம்!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு பெயர் சூட்டி புகைப்படத்துடன் ட்விட்டரில் அறிவிப்பாகவே வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010-ம் ஆண்டு தனது மாமன் மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2013-ம் ஆண்டு ஆராதனா என்ற மகள் பிறந்தாள். சமீபத்தில் இத்தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய அப்பாவே மகன் ஆக பிறந்துள்ளதாக மகன் பிறந்ததை அறிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

தற்போது சிவகார்த்திகேயன் தனது மகனுக்குப் பெயர் சூட்டி உள்ளதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தனது தந்தையின் நினைவாக மகனுக்கு ‘குகன் தாஸ்’ எனப் பெயர் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version