சினிமா செய்திகள்
சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க ரெடியான சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன், முன்னணி நடிகராக மாறியது மட்டுமல்லாமல், வெற்றி தயாரிப்பாளர் என்ற பெயரையும் தனது முதல் தயாரிப்பான கனா படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.
கனா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது பேனரில் அடுத்ததாக பிளாக்ஷிப் டீம் உருவாக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா? என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால், தனது மூன்றாவது தயாரிப்பாக உருவாகவுள்ள படத்தில் தானே கதாநாயகனாக நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கவுள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. அடுத்ததாக, ரவிக்குமார் இயக்கத்தில், சயின்ஸ் ஃபிக்ஷன் படம் ஒன்றும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமீட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், வரும் ஜூன் மாதத்தில் துவங்கும் தனது மூன்றாவது புரொடக்ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசு பாடல் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், நெல்சன் – சிவகார்த்திகேயன் காம்பினேஷன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.