சினிமா செய்திகள்

ஆனைமலை, பழனி… கோயில் கோயிலாகச் செல்லும் நடிகர் சிவகார்த்திகேயன்..!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து கோயில் கோயிலாகச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். டான் படத்துக்காக கோயம்புத்தூரில் படப்பிடிப்பில் இருந்த போது ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். தற்போது படப்பிடிப்பு பழனி சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

இதையடுத்து பழனியில் உள்ள முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். பழனி கோயிலில் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் எடுத்தப் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழனி கோயிலில் சமீபத்தில் தனது மகன் குகன் தாஸ் பெயரிலும் இதர குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சிவகார்த்திகேயன் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து அயலான், டாக்டர், டான் எனப் பட வெளியிடூகள் உள்ளன. இதற்காகவும் கோயில் கோயிலாகச் சென்று சிவகார்த்திகேயன் வழிபாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version