சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ நேரடி ஓடிடி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி ஓரிரு மாதங்கள் ஆன நிலையில் இந்த படம் ரிலீஸ் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளி வந்திருக்கிறது.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம், நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போவதாகவும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாகவும் விளம்பரம் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘டாக்டர்’ திரைப்படத்தை நேரடியாக திரையரங்குகளில் திரையிட வேண்டும் என கடந்த மூன்று மாதங்களாக படக்குழுவினர் காத்திருந்தனர். ஆனால் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல் இல்லை. அப்படியே திறக்கப்பட்டாலும் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆவதற்கு வரிசையில் காத்திருப்பதால், போதுமான திரையரங்குகள் ‘டாக்டர்’ படத்திற்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து வேறுவழியின்றி படக்குழுவினர் தற்போது ‘டாக்டர்’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோ வெளியிடுகிறது.

seithichurul

Trending

Exit mobile version