சினிமா செய்திகள்

‘டாக்டர்’ படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: கடைசி நிமிடத்தில் சிவகார்த்திகேயனின் அதிரடி!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த படத்தின் முதல் காட்சி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளரின் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து ‘டாக்டர்’ பட குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரின் பொருளாதாரப் பிரச்சினையை தானே முன்வந்து தீர்க்க வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்ததாகவும் இதனை அடுத்து இந்த படம் என்று வெளியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தன்னுடைய முந்தைய படங்களான ‘ரெமோ’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசின்போதும், இதேபோல் மிகப்பெரிய தொகையை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போது ‘டாக்டர்’ படத்தின் ரிலீசுக்காக மிகப் பெரிய தொகையை வழங்கி உள்ளார் அதனால் தான் இன்று டாக்டர் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தின் ரிலீசுக்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போது தன்னுடைய சம்பளத்தின் பெரும்பகுதியை விட்டுக் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயன் கடைசி நிமிட அதிரடியால் தான் இன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து இன்றைய அதிகாலை காட்சியளிக்க அதிக ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனா, யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version