சினிமா செய்திகள்

தனுஷ் பாணியை கடைபிடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?

Published

on

கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் தயாரிப்பாளரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வாங்கிக் கொண்டு தன்னுடைய சம்பளத்தை அதில் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு மீதியை வைத்து படத்தை முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதே பாணியை தற்போது சிவகார்த்திகேயனும் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ’டான்’ படத்தின் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக மொத்தமாக ஒரு பெரிய தொகையை சிவகார்த்திகேயன் வாங்கிக் கொண்டாராம்.

இதனை அடுத்து அவருடைய சம்பளம் ரூபாய் 20 கோடியை எடுத்துக்கொண்டு மீதி உள்ள பணத்தில் படத்தை முடிக்கும் படி படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சிவகார்த்திகேயன் தற்போது பிற நிறுவனங்களின் படங்களில்தான் அதிகம் நடித்து வருவதால் இதே பாணி அவர் தொடர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக கேஜேஆர் எஸ்டுடியோ நிறுவனத்திற்கு அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version