டிவி

பிக்பாஸ் இறுதிப் போட்டியில் சிவகார்த்திகேயன்.. என்ன சொன்னர் தெரியுமா?

Published

on

பிக்பாஸ் சீசன் 5 போட்டியின் இறுதி நாள் இன்று என்பதால் யார் வெற்றியாளர் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார்.

தமிழில் தொடர்ந்து 5 வது ஆண்டாக பிக்பாஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான போட்டியாளர்கள், அவர்களிடம் ஏற்படும் சண்டை, போட்டிகள், நட்பு என ஒவ்வொரு ஆண்டு பார்வையாளர்களையும் அதிகளவில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஈர்த்து வருகிறது.

நடப்பு பிக்பாஸ் சீசன் 105 நாட்கள் நடைபெற்ற நிலையில், பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர், பாவனி உள்ளிட்டவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5-ஐ வெல்லும் வாய்ப்பு அதிகளவிலிருந்த தாமரை, சென்ற வாரம் டிக்கெட் டூ ஃபினாலே போன்றவற்றில் அமீர் மற்றும் நிரூப் முன்னேறியதை அடுத்து, தவிர்க முடியாமல் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், “என்னால் எல்லாம் 3 மணி நேரம் 4 மணி நேரம் கூட போன் இல்லாமல் இருக்க முடியாது. நீங்க எல்லாம் அது இல்லாமல் எப்படி இவ்வளவு நேரம் இருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. எனக்குப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.

எனவே எனக்குத் தெரிந்து இந்த வீட்டில் நிறைய நாட்கள் இருந்தவர்கள் எல்லோருமே வெற்றியாளர்கள் தான், முதல் இடத்தை பிடிக்கும் 3 பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என கூறினார்.

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி, மதுமிதா உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை. இமான் அண்ணாச்சி இறுதி போட்டியாளர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்னர் போனில் ராஜுவிடம் பேசினார். மதுமிதா கொரோனா காரணமாக ஜெர்மனியிலிருந்து திரும்பிவர முடியவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படியோ இன்று பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற ராஜு மற்றும் பிரியங்காவிற்கு அதிக வாய்ப்புள்ளது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Trending

Exit mobile version