சினிமா செய்திகள்

தாயின் காலில் விழுந்து கலைமாமணி விருதை சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்; அரசியலுக்கு வருவது குறித்தும் தகவல்!

Published

on

தமிழக அரசு, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. அவர், அந்த விருதை தன் தாய்க்குச் சமர்ப்பணம் செய்து நெகிழ்ந்துள்ளார்.

இது குறித்து சிவகார்த்திகேயன், ‘சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ எனத் தெரிவித்துள்ளார்.

கலைமாமணி விருது பெற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த சிவகார்த்திகேயனிடம், ‘நீங்க அரசியலுக்கு வருவீங்களா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் சினிமாவில ஹீரோ ஆவேனான்னு நினைச்சது கனவுன்னு கூட சொல்ல முடியாது. சினிமாவுல இருக்கணும்னு மட்டுந்தான் நெனைச்சேன்.

இன்னைக்கு பல வெற்றிப் படங்கள் கொடுத்து, ஒரு ஹீரோ அந்தஸ்துக்கு வந்திருக்கேன். இப்ப இந்த விருது கொடுத்து என்னைய கவுரப்படுத்தி இருக்காங்க. இந்த விருதுக்கு நியாயம் சேக்குற அளவுக்கு உழைக்கணும்னு நினைக்கிறேன்.

அடுத்து வரப் படங்கள்ல இன்னும் நல்லா நடிக்கணும்னு நினைக்கிறேன். அப்படித்தான் என்னால யோசிக்க முடியும். அது விட்டுட்டு ரொம்ப பயங்கரமா, அதிகமா யோசிக்கவில்லைங்க’ என க்யூட்டாக பதில் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version