சினிமா செய்திகள்

‘என்னை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைச்சுட்டீங்க ரகுல்…’- அயலான் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இருவரும் தங்களது அயலான் படப்பிடிப்பு அனுபவங்களை மாறி மாறி ட்விட்டரில் பகிர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் தனது பகுதியை முடித்துவிட்டாராம். இதற்காக படக்குழுவினர் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அயலான் படப்பிடிப்பை நிறைவு செய்கிறேன். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே எனக்கான ஷூட்டிங் உள்ளது. மிகவும் லட்சியமுடைய இயக்குநராக இயக்குநர் ரவிக்குமார் உள்ளார். மிகவும் ஸ்வீட்டான சக நடிகர் சிவகார்த்திகேயன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்-க்கு ட்விட்டரிலேயே பதில் அளித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவா, “ரகுல் ப்ரீத் உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை எப்போதும் இங்கிலீஷிலேயே (ஐ திங்க் ஐ ஸ்பீக் ப்ரிட்டிஷ் இங்கிலிஸ்)” என தன்னைத் தானே கேலி செய்யும் வகையில் நன்றி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version