சினிமா செய்திகள்

தேசிய விலங்கை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் தேசிய விலங்கான புலிக்குட்டி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.

சீமராஜா படத்தை தொடர்ந்து, சமீபத்தில் மோதி மிதித்து விடு பாப்பா என்ற குழந்தைகளுக்கு குட் டச் எது பேட் டச் எது என்று விளக்கும் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது, வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள ’அனு’ என்கிற 10வயது வெள்ளை நிற புலிக்குட்டியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்கு இவரது பராமரிப்பில் அந்த புலிக்குட்டி இருக்கும்.

ஆறு மாதம் அந்த புலிக்குட்டியை பராமரிக்கும் செலவுக்காக சுமார் 2.12 லட்சம் ரூபாயை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சிவகார்த்தியேன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அழிந்து வரும் இந்தியாவின் தேசிய விலங்கான புலிக்குட்டியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்து பராமரிப்பதற்கு வாழ்த்துகள்!

seithichurul

Trending

Exit mobile version