இந்தியா

சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவுக்கு பலி: தலைவர்கள் இரங்கல்!

Published

on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் கொரோனாவால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டர். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் எனது மூத்த மகனாக ஆசிஷ் யெச்சூரி கோவிட் தொற்று காரணமாக சற்று முன்னர் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், சானிட்டரி ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

சீதாராம் எச்சூரி யெச்சூரி அவர்கள் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு ஆறுதல் மட்டும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களும் இந்த தகவலால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version