சினிமா
சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்…..
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா 3வது அலை வீசி வருகிறது. தினமும் சில லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா , மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது.இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கையாக இருந்தும் லேசான பாதிப்புகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எனவே, வீட்டிலேலே என்னை தனிமைப்படுத்திகொண்டேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர்களும், தெலுங்கு சினிமா பிரபலங்களும் விரைவில் அவர் குணமடைய பிரார்த்திப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.