தமிழ்நாடு

மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!

Published

on

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று இரவு காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மாணிக்கவிநாயகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அவருடைய வீட்டிற்கே நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாணிக்கவிநாயகம் மறைவு குறித்து நேற்று பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை மறைந்த மாணிக்க விநாயகம் உடலுக்கு அவருடைய திருவான்மியூர் வீட்டிற்கு நேரடியாக சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களும் மாணிக்கவிநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்ததாவது:

பிரபல திரைப்படப் பாடகர் திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.
அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்.

seithichurul

Trending

Exit mobile version