தமிழ்நாடு

பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் உள்பட 4 பேர் மீது வழக்கு!

Published

on

நடிகர் விக்ரம் பிரபு நடித்த படம் உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பின்னனி பாடகி ஒருவரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பாடகி ஒருவர் தனது 15 வயது மகளை சென்னையில் உள்ள தனது தங்கை வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் பாடகியின் தங்கை, தங்கையின் கணவர் மற்றும் உறவினர் ஒருவர் ஆகிய மூவரும் பாடகியின் மகளை சர்ச் ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவரை பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரியவந்தது.

இதனை பாடகியின் மகள் தனது அம்மாவிடம் அழுது கொண்டே கூறியதை அடுத்து பாடகி தனது மகளை அழைத்து சென்று போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாடகியின் தங்கை, தங்கையின் கணவர், பாடகியின் உறவினர் மற்றும் பாதிரியார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version