சினிமா செய்திகள்
பிரபல பாடகியின் சுயசரிதைக்கு ரூ.112 கோடி கொடுத்த நிறுவனம்!
பிரபல பாடகியின் சுயசரிதையை எழுதுவதற்கான உரிமையை பெற ரூபாய் 110 கோடி கொடுப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த 90களில் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் என்பதும் இவரது ஒவ்வொரு ஆல்பங்களும் முந்தைய ஆல்பங்களில் விற்பனை சாதனையை முறியடித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது வாழ்வில் எந்த அளவுக்கு பணம் கொட்டியதோ அதே அளவிற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தது. தனது வாழ்க்கையின் வலி மிகுந்த பாகத்தை அவர் சுயசரிதையாக எழுத முடிவு செய்வதாக சமீபத்தில் அறிவித்தார் .
இந்த சுயசரிதையின் உரிமையை பிரபல புத்தக நிறுவனங்கள் முண்டியடித்த நிலையில் சைமன் அண்ட் ஷார்ஸ்ட் என்ற நிறுவனம் 15 மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ 112 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த புத்தகத்தில் மனம் திறந்து தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் எழுத ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.