டிவி

என் மேல் இவ்வளவு வெறுப்பா?- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பென்னி தயால்!

Published

on

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர் ஆக இருந்த பாடகர் பென்னி தயால் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாட்டு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீசன் 8. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம், பென்னி தயால், எஸ்.பி சரண் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களைத் தேர்வு செய்து அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

கடந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பாடும் போட்டியாளர் ஶ்ரீதர் சேனா என்பவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த எலிமினேஷன் அறிவிப்பை செய்தவர் பென்னி தயால். ஶ்ரீதர் சேனாவின் ரசிகர்கள் அவரை நடுவர்கள் வேண்டுமென்றே பாரபட்சத்துடன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டதாகவும் ஶ்ரீதரை விட மோசமான போட்டியாளர்கள் இருந்தும் நடுவர்கள் இப்படி நடந்து கொண்டது தவறு என சமுக வலைதளங்களில்  பதிவேற்றி வருகின்றனர்.

பென்னி அறிவித்த ஒரே காரணத்துக்காக ஶ்ரீதர் சேனா ரசிகர்கள் பலரும் அவரை சமுக வலைதளங்களில் அதிகப்படியாக விமர்சித்து வருவதால், இனிமேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் பங்கேற்கப் போவது இல்லை என பென்னி அறிவித்துள்ளார். மேலும், இனி சூப்பர் சிங்கர் குறித்து எதுவுமே பேச மாட்டேன் என்றும் பென்னி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version