சினிமா செய்திகள்
சிம்புவின் மாநாடு படத்தின கதையைக் கேட்டு வியந்த பிரபல இயக்குநரின் மகள்!
வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்திற்கு சிம்பு விரைவில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.
இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாகப் பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ஒப்பந்தமாகியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் நாயகியும் இவர் தான். மாநாடு படத்தின் கதையைக் கேட்ட கல்யாணி ப்ரியதர்ஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் “அற்புதமான ஸ்க்ரிப்ட்” என்று கூறியுள்ளார்.
Can’t wait to bring that amazing script to life! @vp_offl #STR @sureshkamatchi#maanaadu
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) March 29, 2019
கல்யாணி ப்ரியதர்ஷன் 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹலோ திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஆவார்.
#str in#maananu updates!! Proud and happy that the stage of #Maanadu will be graced having Kalyani Priyadarshan on Board pairing #STR. @vp_offl @kalyanipriyan @Vijayakumar1959 @subbu6panchu @BoopathyDeepan @hariharannaidu @johnmediamanagr #str pic.twitter.com/uw4JFevlR4
— sureshkamatchi (@sureshkamatchi) March 29, 2019
மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியும் கல்யாணி ப்ரியதர்ஷன் நாயாகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
உடல் எடையைக் குறைக்க லண்டன் சென்றுள்ள சிம்பு அங்கிருந்து திரும்பி வந்த உடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.