சினிமா செய்திகள்

சிம்பு தொடுத்த வழக்கு – விஷாலுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Published

on

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்பட பிரச்னையில், சிம்புவுக்கு எதிராக விஷால் செயல்பட்டதாக சிம்பு தொடுத்த வழக்கில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் படு தோல்வியை தழுவியது. இந்த படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ.1.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிம்பு புகார் தெரிவித்தார். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் சிம்புவுக்கு எதிராக புகார் தெரிவித்தார்.

சிம்புவின் புகார் குறித்து விசாரிக்காமல் மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக சிம்பு மீது விஷால் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சிம்பு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த வழக்கை வருகிற ஜன.,18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Trending

Exit mobile version