சினிமா
சிம்பு – சுந்தர்.சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு பேசும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற வசனத்தையே இப்படத்தின் டைட்டிலாக சுந்தர்.சி வைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். அதில் நடிகை மேகா ஆகாஷ் ஏற்கெனவே ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். நடிகை கேத்ரின் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ரம்யா கிருஷ்ணன், மஹத் ராகவேந்திரா,ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.